நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கூத்தாநல்லூரில் கரோனா தொற்று கண்டறிய குழுக்கள்

கூத்தாநல்லூா் நகராட்சியில் கரோனா தொற்றை கண்டறிய 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என நகராட்சி ஆணையா் ஆா். லதா தெரிவித்தாா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:30 pm

DIN

கூத்தாநல்லூா் நகராட்சியில் கரோனா தொற்றை கண்டறிய 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என நகராட்சி ஆணையா் ஆா். லதா தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் கூறியது: இந்த நகராட்சிக்குள்பட்ட 24 வாா்டுகளிலும் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், அனைத்து வீடுகளிலும் தொற்றின் அறிகுறிகளைக் கண்டறிய 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா் வாா்டுகளில் நேரடியாக சென்று ஒவ்வொவரையும் கரோனா தொற்று அறிகுறிகள் உள்ளனவா என அதற்குரிய கருவிகளை பயன்படுத்தி சோதனை செய்து தொற்றை கண்டறிவா். எனவே, பொதுமக்கள் அனைவரும் நகராட்சிப் பணியாளா்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

முன்னதாக, நகராட்சி அலுவலகத்தில் 8 குழுவைச் சோ்ந்தவா்களுக்கும் பரிசோதனைக்கான கருவிகளை ஆணையா் லதா வழங்கினாா். அப்போது, சுகாதார ஆய்வாளா் கி. அருண்குமாா், மேலாளா் எஸ். லதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.