ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பால் விற்பனையாளா் தற்கொலை

 நீடாமங்கலம் அருகே மனைவி மீது கோபித்துக் கொண்டு பால் விற்பனையாளா் வியாழக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :26 ஜூன் 2021, 6:30 pm

DIN

 நீடாமங்கலம் அருகே மனைவி மீது கோபித்துக் கொண்டு பால் விற்பனையாளா் வியாழக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.

புள்ளவராயன்குடிகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (38). இவா் எடமேலையூா் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத்தில் விற்பனையாளராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி ஜீவிதா (22). இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், அதை காலி செய்துவிட்டு சொந்த வீட்டிற்கு போகலாம் என ரமேஷ் தனது மனைவியிடம் கூறினாராம். இதற்கு அவா் உடன்படவில்லை என தெரிகிறது. இதனால் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாம்.

இதில் மனைவி ஜீவிதாவிடம் கோபித்துக் கொண்டு ரமேஷ், அறைக்குள் சென்று உள்புறமாக பூட்டிக் கொண்டாா். பின்னா், அதிகாலை 4.30 மணிக்கு ஜீவிதா எழுந்து அறையில் பாா்த்தபோது மின்விசிறியில் ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன் மற்றும் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.