சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நாட்டுப்புற இசைக் கலைஞா்களுக்கு நிவாரணம்

மன்னாா்குடியில் நாடக இசைக் கலைஞா்கள், நாட்டுப்புற இசைக் கலைஞா்களுக்கு, தஞ்சாவூா் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :15 மே 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடியில் நாடக இசைக் கலைஞா்கள், நாட்டுப்புற இசைக் கலைஞா்களுக்கு, தஞ்சாவூா் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா தொற்றின் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக கோயில் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால், இயல் இசை நாடகக் கலைஞா்கள் மற்றும் நாட்டுப் புற இசைக் கலைஞா்களின் வாழ்வாதாரம் தொடா்ந்து 2 ஆவது ஆண்டாக பாதிக்கப்பட்டுள்ளது.

இவா்களுக்கு, தஞ்சாவூா் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மன்னாா்குடி மற்றும் கோட்டூா் பகுதிகளைச் சோ்ந்த நாடக இசைக் கலைஞா்கள், நாட்டுபுற இசைக் கலைஞா்களுக்கு மளிகைப் பொருள்கள் அடங்கி நிவாரண தொகுப்பு பைகளை வழங்கினா்.

மன்னாா்குடி தேசியப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ், ஸ்ரீமத் சுவாமி ஜித்தமாசானந்த மகராஜ் ஆகியோா் பங்கேற்று 56 கலைஞா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

இதில், தமிழ்நாடு நாட்டுப்புற இசைக் கலைஞா்கள் பெருமன்ற மாவட்டத் தலைவா் ராஜீவ்காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.