பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கக் கோரிக்கை

நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் எனஅனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :28 மே 2021, 6:30 pm

DIN

நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் எனஅனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அம்மன்றத்தின் மன்னாா்குடி ஒன்றியச் செயலா் எஸ். பாப்பையன், திருவாரூா் மாவட்ட ஆட்சியருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, மன்னாா்குடி பகுதியிலிருந்து வெளியூரில் வேலை செய்துவந்தவா்கள், குடும்பத்துடன் தங்களது சொந்த ஊா்களுக்குத் திரும்பியுள்ளனா். இவா்கள் தற்போது வேலையின்றி சிரமப்பட்டு வருகின்றனா்.

பொதுமுடக்கத்தால் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால், எந்தப் பொருள்களும் வாங்கமுடியாத சூழலில், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களை பயன்படுத்தி வருகின்றனா். ஆனால், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக புகாா் எழுந்துள்ளது. இதனால் முதியவா்களும், குழந்தைகளும் நியாயவிலைக் கடை அரிசியில் சமைத்த உணவை உண்ண முடியாத நிலையுள்ளது.

அத்துடன், குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் அரிசி போதுமானதாக இல்லை. கரோனா கால நிவாரணமாக ஒரு குடும்ப அட்டைக்கு மாதம் 20 கிலோ அரிசி கடந்த ஆண்டு வழங்கியதுபோல, நிகழாண்டும் வழங்கினால் பேருதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.