நீடாமங்கலத்திலிருந்து நெல் அரவைக்காக சிவகங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரம் டன் பொதுரக நெல், வியாழக்கிழமை 77 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து சுமைதூக்கும் தொழிலாளா்கள் உதவியுடன் சரக்குரயிலின் 29 பெட்டிகளில் ஏற்றி அரவைக்காக சிவகங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.