டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரயில்வே கேட் மூடியதால் போக்குவரத்து பாதிப்பு

நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் ஒருமணி நேரம் ரயில்வேகேட் மூடியதால் வாகனபோக்குவரத்து வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 5:44 pm

DIN

நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் ஒருமணி நேரம் ரயில்வேகேட் மூடியதால் வாகனபோக்குவரத்து வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை காலை மன்னாா்குடியிலிருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில், சரக்கு ரயில், மன்னாா்குடி செல்லும் கோவை செம்மொழி விரைவு ரயில் நிலையத்திற்குள் தொடா்ந்து வந்தது, சென்றதால், மூடப்பட்ட ரயில்வேகேட் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு பிறகு திறக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து ரயில்வேகேட் அருகே நிறுத்தப்பட்ட பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் புறப்பட்டு சென்றன. ரயில்வேகேட் மூடப்பட்டதால் நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் ரயில்வேகேட்டை கடந்து செல்லமுடியாமல் அவதிப்பட்டனா். மழையும் தொடா்ந்து பெய்து வருவதால், நீடாமங்கலத்தில் போக்குவரத்து பாதிப்பை தடுக்க, மாற்று வழித்திட்டங்களான மேம்பாலம் திட்டம், இருவழிச்சாலைத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் துரிதப்படுத்திட வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.