என்ஜின் கோளாறு: மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்

மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் மின்சாரம் காரணமாக ஏற்பட்ட தடையால் நீடாமங்கலம் ரயில்நிலையம் அருகில் திங்கட்கிழமை அதிகாலையில் அரைமணி நேரம் நின்றது.
நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகில் திங்கட்கிழமை அதிகாலை என்ஜினில் ஏற்பட்ட சிறிய கோளாறு காரணமாக சிக்னல் பாயிண்ட் பகுதியில் நின்ற மன்னை எக்ஸ்பிரஸ் ரயில்.
நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகில் திங்கட்கிழமை அதிகாலை என்ஜினில் ஏற்பட்ட சிறிய கோளாறு காரணமாக சிக்னல் பாயிண்ட் பகுதியில் நின்ற மன்னை எக்ஸ்பிரஸ் ரயில்.
Published on
Updated on
1 min read

மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் மின்சாரம் காரணமாக ஏற்பட்ட தடையால் நீடாமங்கலம் ரயில்நிலையம் அருகில் திங்கட்கிழமை அதிகாலையில் அரைமணி நேரம் நின்றது.
 
சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடிக்கு அதிகாலையில் செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் (மின்சார)ரயிலுக்காக திங்கட்கிழமை அதிகாலை 4.40 மணிக்கு ரயில்வேகேட் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீடாமங்கலம் வந்த மன்னை எக்ஸ்பிரஸ் ரயில்ரயில் நிலையத்திற்குள் வராமல் சிக்னல் பாயிண்டில் நின்றது.

பயணிகளுக்காக நிலையத்தில் காத்திருந்த உறவினர்கள், ரயில்நிலைய ஊழியர்கள் ரயில் நிலையத்திற்குள் ரயில் வராதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து ரயில்நிலைய ஊழியர்கள் ரயில் நிற்கும் இடத்திற்குச் சென்று பார்த்தனர். மின்சாரம் நின்று வந்ததால் ரயில் என்ஜினும் நின்று போனது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து என்ஜினில் ஏற்பட்ட சிறியகோளாறு சீராகி மீண்டும் ரயில்நிலையத்திற்குள் வந்து பயணிகள் இறங்கியபின் அரைமணிநேரம் தாமதத்துடன் மன்னார்குடி புறப்பட்டுச் சென்றது. அதன்பின்னர் ரயில்வேகேட் திறக்கப்பட்டு நெடுஞ்சாலை வாகனங்கள் சுமார் 45 நிமிடம் தாமதத்துடன் புறப்பட்டுச் சென்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com