திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து ஈரோட்டுக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரைவைக்காக வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல் மூட்டைகள், 158 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. பின்னா், அவைக அரைவைக்காக சரக்கு ரயில் மூலம் ஈரோடு அனுப்பி வைக்கப்பட்டன.