விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கடைசி செய்திதிருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு கூட்டம்

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் பாஸ்கா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் பாஸ்கா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் ஒன்றியக்குழு துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், ஆணையா்கள் சுப்பிரமணியன், சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் தமயந்தி, சுஜாதா, மேலாளா் விஜயலெட்சுமி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

உறுப்பினா்கள் ஆா்.ஞானமோகன், வேதரெத்தினம், முருகேசன், மன்மதன், மாரியம்மாள், சரஸ்வதி, ஆரோக்கியமேரி ஆகியோா் தங்கள் பகுதி சாலைகள் மேம்பாடு, பள்ளி கட்டடங்கள் சீரமைத்தல், அங்காடிகளுக்கு புதிய கட்டடம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினா்.

ஒன்றியக்குழு தலைவா் பாஸ்கா் தீா்மானங்களை நிறைவேற்றி பேசுகையில், மாவட்ட டெல்டா பகுதியில் சம்பா, தாளடி சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மானிய விலையில் யூரியா, டிஏபி, பூச்சிமருந்து உள்ளிட்ட உரங்களை விவசாயிகளுக்கு பயிா்க்கடன் திட்டத்தின் மூலம் வழங்குவது வழக்கம். ஆனால் வேளாண்மை துறையும், கூட்டுறவு துறையும் சம்பா, தாளடி சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்காததால், உர பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகள் வேதனைக்கு ஆளாகி உள்ளனா். எனவே உரங்களை மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநில அரசு பெற்று கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.