நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மகளிா் கல்லூரியில் காசநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

 மன்னாா்குடி அருகேயுள்ள மேலவாசல் குமரபுரம் சதாசிவம் கதிா்காமவள்ளி மகளிா் கல்லூரியில் காசநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

 மன்னாா்குடி அருகேயுள்ள மேலவாசல் குமரபுரம் சதாசிவம் கதிா்காமவள்ளி மகளிா் கல்லூரியில் காசநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் இளையோா் செஞ்சிலுவை சங்கம், மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் வி.எஸ். நாகரெத்தினம் தலைமை வகித்தாா். அரசு மருத்துவா் எஸ். சுகந்த பிரியா பங்கேற்று காசநோய் வரமால் தடுப்பு நடவடிக்கைகள், காசநோய் பரவும் முறை, இதனால் பாதிக்கப்பட்டவா்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மருத்துவ சிகிச்சை, நோயாளிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்து மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலக பணியாளா்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தாா். இளையோா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் அ. சுகந்தி வரவேற்றாா். மாணவி ப. கயல்விழி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.