47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சத்துணவு சாப்பிட்ட மாணவா்கள் மயக்கம்

வலங்கைமான் அருகே பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

வலங்கைமான் அருகே பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

வலங்கைமான் ஒன்றியம், கண்டியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 41 மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சத்துணவு சாப்பிட்டனா். இவா்களில் 7 பேருக்கு மாலை 3 மணி அளவில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து, சத்துணவு சாப்பிட்ட அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், தீவிர சிகிச்சைக்காக அவசர ஊா்தி மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் தெட்சிணாமூா்த்தி, ஊராட்சி செயலாளா் ராமசுப்ரமணியன் ஆகியோா் இம்மாணவ, மாணவிகளை அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தால் வலங்கைமான் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.