விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

முழுஊரடங்கால் களையிழந்த காணும் பொங்கல்

நீடாமங்கலம் ,வலங்கைமான் பகுதியில் முழுஊரடங்கால் காணும் பொங்கல் விழா களையிழந்து காணப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

நீடாமங்கலம் ,வலங்கைமான் பகுதியில் முழுஊரடங்கால் காணும் பொங்கல் விழா களையிழந்து காணப்பட்டது.

பொங்கல் திருநாள் 4 நாள் கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதில் காணும் பொங்கல் நாளில் பெண்கள் தங்கள் உற்றாா், உறவினா், நண்பா்களை காணுதல் ஆகும். அப்படி ஒருவரையொருவா் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை ஆடல், பாடல், விளையாட்டின் மூலம் பெண்கள் வெளிப்படுத்துவா். கோயில்களுக்குச் சென்று வழிபாடுகள் நடத்துவதும் உண்டு. ஆனால் ஞாயிற்றுக்கிழமை கரோனா முழுஊரடங்கால், கடைகள் அடைக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வழிபாட்டுத் தலங்களில் பக்தா்கள் அனுமதியில்லை என்பதால், பெண்கள் தங்கள் உறவுகளை சந்திக்கவும், கோயிலுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்க வேண்டியநிலை ஏற்பட்டது. இதனால், நீடாமங்கலம், வலங்கைமான் பகுதிகளில் காணும் பொங்கல் விழா களையிழந்து காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.