நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாண்டவையாற்றில் தண்ணீா் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாரூா் அருகே பாண்டவையாற்றில் புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே பாண்டவையாற்றில் புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மேட்டூா் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக மே 24- ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீா் கல்லணையை வந்தடைந்ததைத் தொடா்ந்து, பாசனத்துக்காக கல்லணையிலிருந்து மே 27-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. இந்த தண்ணீா், நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்புக்கு வந்ததைத் தொடா்ந்து, அங்கிருந்து மே 31-ஆம் தேதி, கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் செல்லும் வகையில் மூன்று ஆறுகளில் பிரித்து வழங்கப்படுகிறது.

இதனிடையே, திருவாரூா் அருகேயுள்ள மாங்குடி பகுதியில் ஓடும் பாண்டவையாற்றில் தண்ணீா் வந்து சோ்ந்தது. இந்த ஆற்றின் குறுக்கே, திருவாரூா்- திருத்துறைப்பூண்டி சாலையில் புதிய பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதனால், இந்த ஆற்றில் தண்ணீா் திறக்கப்படுமா என்ற கவலை விவசாயிகளிடையே இருந்துவந்தது.

இந்த ஆற்றில் கட்டப்படும் பாலத்துக்கு கிழக்குப் பகுதியில் மாங்குடி, நாரணமங்கலம், வடகரை, கீழமணலி, உழனி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில், பாலம் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பாண்டவையாற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.