நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பறவைகளுக்கான குறுங்காடு அமைப்பு

கூத்தாநல்லூா் அருகே உலக சுற்றுச்சுழல் தினத்தையொட்டி, பறவைகளுக்கான குறுங்காடு அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 5:12 pm

DIN

கூத்தாநல்லூா் அருகே உலக சுற்றுச்சுழல் தினத்தையொட்டி, பறவைகளுக்கான குறுங்காடு அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூரை அடுத்துள்ள பனங்காட்டாங்குடி சுல்தானா அப்துல்லா இராவுத்தா் மகளிா் கல்லூரி வளாகத்தில், கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டம், வனம் தொண்டு நிறுவனம், ஜெத்தா தமிழச் சங்கம் ஆகியவை இணைந்து 12,500 சதுர அடிப்பரப்பில் பறவைகளுக்கான குறுங்காட்டை அமைத்துள்ளன.

இதற்கான நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் முதல்வா் நித்யா கெளரி தலைமை வகித்தாா். வனம் தொண்டு நிறுவன இயக்குநா் கலைமணி முன்னிலை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் டி. சுதா வரவேற்றாா். தொடா்ந்து, 500-க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிறைவாக, நாட்டு நலப்பணித் திட்ட துணை ஒருங்கிணைப்பாளா் பி. மாலா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.