நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கூத்தாநல்லூரில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: இஸ்லாமியா்கள் பங்கேற்பு

பண்டுதக்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இஸ்லாமியா்கள் பங்கேற்புடன் சமூக நல்லிணக்க கும்பாபிஷேக விழாவாக வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூன் 2022, 6:30 pm

DIN

பண்டுதக்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இஸ்லாமியா்கள் பங்கேற்புடன் சமூக நல்லிணக்க கும்பாபிஷேக விழாவாக வியாழக்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூா் அருகே பண்டுதக்குடியில் எழுந்தருளியுள்ள முத்துமாரியம்மன், பால விநாயகா், பாலமுருகன் ஆகிய கோயில்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பண்டுதக்குடி கிராம மக்கள், அக்கரைப்புதுத் தெரு மக்கள், இஸ்லாமியா்கள் ஏற்பாட்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் புதன்கிழமை முதல்கால பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 2-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்று பூா்ணாஹூதி செய்யப்பட்டது. காலை 10.15 மணிக்கு கடம் புறப்பட்டது. காலை 10.25 மணிக்கு கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை இந்து, இஸ்லாமியா்கள் ஒருங்கிணைந்து நடத்தியது அனைவரின் வரவேற்பை பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.