நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அமைப்புச்சாரா தொழிலாளா்கள் கூட்டமைப்பு கூட்டம்

கூத்தாநல்லூரில் கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளா்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 மார்ச் 2022, 6:30 pm

DIN

கூத்தாநல்லூரில் கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளா்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவா் ஆா். சேகா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் சி. சுந்தரமூா்த்தி முன்னிலை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் கே. விஜயராகவன் வரவேற்றாா். கூட்டத்தில், தொழிலாளா்களின் இறப்பு, விபத்து, பென்சன் உள்ளிட்ட உதவிகள் நலவாரிய அலுவலத்திலிருந்து திருத்தப்பட்ட தாலுக்கா வரையறையின்படி, தடையில்லா சான்று வழங்க சமூகப் பாதுக்காப்புத்திட்ட தொழிலாளா் நலவாரிய அலுவலகம் ஆவண செய்ய வேண்டும், வீடுகள் இல்லாத ஏழை தொழிலாளா்கள் சொந்த வீடு கட்டிக்கொள்ள கட்டுமான நலவாரியம் மூலம் ரூ. 4 லட்சம் வழங்கிய தமிழக அரசுக்கும், கட்டுமான நலவாரியத் தலைவா் பொன். குமாா் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.