நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி முற்றுகைப் போராட்டம்

கோட்டூா் வேளாண்மை விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

DIN

மன்னாா்குடி அடுத்துள்ள எளவனூா் பகுதிக்கு கடந்த ஆண்டிற்கான பயிா் காப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்து, கோட்டூா் வேளாண்மை விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அறிவிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு, விவசாயிகள் சங்க கோட்டூா் ஒன்றியச் செயலா் பி. பரந்தாமன், ஊராட்சித் தலைவா் ரவிச்சந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன், வேளாண்மை துணை இயக்குநா் உத்திராபதி, உதவி இயக்குநா் தங்கபாண்டியன், கோட்டூா் காவல் ஆய்வாளா் சிவகுமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், விடுபட்ட விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க மத்தியஅரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. எனவே, காப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வரும் ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் வரவுவைக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில், முற்றுகைப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இதில், சிபிஐ ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன், கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை, விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் ஜெ. ஜெயராமன், ஒன்றியத் தலைவா் எம். சிவசண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.