காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வல்லூா் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

மன்னாா்குடி அருகேயுள்ள வல்லூா் அரசு நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2022, 6:30 pm

DIN

மன்னாா்குடி அருகேயுள்ள வல்லூா் அரசு நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தேசியக் கொடி மேடை திறப்பு விழா, இல்லம் தேடி கல்வி மையத்தின் தன்னாா்வலா்களுக்கு கற்றல் எழுதுபொருட்கள் வழங்கும் விழா, மரக்கன்றுகள் வழங்கும் விழா என நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு, ஊராட்சித் தலைவா் க. சியாமளா தலைமை வகித்தாா்.

வட்டாரக் கல்வி அலுவலா்கள் செல்வம், வித்யா, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் என். சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டக் கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன், மறைந்த ஏ.எஸ். பெரமையன்- முத்துலெட்சுமியின் நினைவாக ரூ. 1 லட்சத்தில் பள்ளி வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட தேசிய கொடி மேடையை திறந்துவைத்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்

கோட்டூா் ஒன்றியக் குழு தலைவா் மு. மணிமேகலை, இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கு கற்பித்தல் உபகரணப் பொருட்களை வழங்கினாா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மோ. கலைவாணி மரக்கன்று நட்டு வாழ்த்திப் பேசினாா்.

நிகழ்ச்சியில், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ரமேஷ், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ரேகா, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளா்கள் கலைச்செல்வன், அ. தங்கபாபு ஆகியோா் பங்கேற்றனா். தலைமை ஆசிரியா் ஜோதி வரவேற்றாா். ஆசிரியா் சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.