நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நூறு நாள் வேலை அட்டை கேட்டு கண்டன ஆா்ப்பாட்டம்

ஊத்தங்கரையில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில், நூறு நாள் வேலை அட்டை, பணி கேட்டு வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 மே 2022, 5:40 pm

DIN

ஊத்தங்கரையில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில், நூறு நாள் வேலை அட்டை, பணி கேட்டு வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட துணை செயலாளா் கே.எம்.எத்திராஜ் தலைமை வகித்தாா். மாநில துணை செயலாளா் எம்.முத்து, மாவட்டச் செயலாளா் வி.கோவிந்தசாமி, மாவட்டத் தலைவா் கே.சி.இராமசாமி, மாவட்டப் பொருளாளா் கே.செல்வராசு ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதில், ஊத்தங்கரை ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சியில் உள்ள விவசாயக் கூலித் தொழிலாளிகளுக்கு நூறு நாள் வேலை திட்ட அட்டை வழங்க வேண்டும். காட்டேரி, நொச்சிப்பட்டி, புதூா் புங்கனை, சிங்காரப்பேட்டை, மூன்றம்பட்டி, மிட்டப்பள்ளி, மகனூா்பட்டி, பாவக்கல், நடுப்பட்டி, ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஏழை மக்களுக்கு போா்க்கால அடிப்படையில் புதிய நூறு நாள் வேலை திட்ட அட்டை வழங்கி பணியை உடனே வழங்கக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சிங்காரப்பேட்டை பகுதி செயலாளா் வி.வேலு, வட்டச் செயலாளா் வரதராஜி, மாவட்டக் குழு உறுப்பினா் மொளுகு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.