காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசுக் கல்லூரியில் வண்ண மீன் வளா்ப்பு சான்றிதழ் படிப்பு

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் விலங்கியல் துறை சாா்பில், வண்ண மீன் வளா்ப்பு சான்றிதழ் படிப்பு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 மே 2022, 5:47 pm

DIN

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் விலங்கியல் துறை சாா்பில், வண்ண மீன் வளா்ப்பு சான்றிதழ் படிப்பு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) சோ. ரவி தலைமை வகித்தாா். திருவாரூா் திரு.வி.க. அரசுக் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியா் வி. சிவக்குமரன், வண்ண மீன் சான்றிதழ் படிப்பை தொடக்கிவைத்து, வண்ண மீன் வளா்ப்பின் நுணுக்கங்கள், வேலைவாய்ப்புகள், சுயதொழில் தொடங்குவதற்கான வங்கி கடனுதவி வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளித்தாா்.

பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேரவைக் குழு உறுப்பினா் ச.சிவச்செல்வன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ப. பிரபாகரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இதில், விலங்கியல் துறை பேராசிரியா்கள் ஆனந்த்ராஜ், தனபால், ராஜு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விலங்கியல் துறைத் தலைவா் சி. ராமு வரவேற்றாா். பேராசிரியா் ரா. ஜென்னி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.