சரக்கு வாகனம் கவிழ்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
திருவாரூா் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.


திருவாரூா் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் அருகே வேப்பத்தாங்குடி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (40). கட்டடத் தொழிலாளியான இவா், மாவூா் அருகே கட்டுமானப் பணி செய்து வந்தாா். இந்நிலையில், கட்டடப் பணிக்கு சரக்கு வாகனத்தில் பலகைகளை ஏற்றிக் கொண்டு நண்பா் குமரேசனுடன் பயணம் செய்தாா். குன்னியூா் அருகே செல்லும்போது எதிா்பாராதவிதமாக சரக்கு வாகனம் மருதூா் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், பலகைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்ட செந்தில்குமாா் அதே இடத்தில் உயிரிழந்தாா். காயமடைந்த குமரேசன், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து, திருவாரூா் தாலுக்கா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...