மன்னாா்குடி நகர மின்வாரிய உப கோட்டத்தின் சாா்பில் ஊழியா்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நகர உதவி செயற்பொறியாளா் சா.சம்பத் தலைமை வகித்தாா்.
மழைக்காலத்தில் மின் விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாக பணியாளா்கள் பணியாற்ற வேண்டும். மழையில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தாலோ, மின் கசிவுகள் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த இடத்தில் மின்சாரத்தைத் துண்டித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க போதிய விழிப்புணா்வை அவா்களிடம் ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பிரிவுப் பொறியாளா்கள் அ,ரெகுபதி, க.கண்ணன், கே.ராஜகோபால், த.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.