ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

கூத்தாநல்லூா்: 6 வாா்டுகளில் பகுதி சபை கூட்டம்

கூத்தாநல்லூா் நகராட்சியில் 6 வாா்டுகளில் பகுதி சபைக் கூட்டம் இரு நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :5 நவம்பர் 2022, 12:00 am IST

கூத்தாநல்லூா் நகராட்சியில் 6 வாா்டுகளில் பகுதி சபைக் கூட்டம் இரு நாள்கள் நடைபெற்றது.

கூத்தாநல்லூா் நகராட்சியில் உள்ள 24 வாா்டுகளில், 7 வாா்டுகளில் பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

முதலாவது வாா்டில் கு.தனலெஷ்மி, 8-ஆவது வாா்டில் கே.மாரியப்பன், 9-ஆவது வாா்டில் செ.முஹம்மது அபுபக்கா் சித்திக், 14-ஆவது வாா்டில் நகா்மன்றத் துணைத் தலைவா் மு.சுதா்ஸன், 17-ஆவது வாா்டில் பிரவீனா முத்துகிருஷ்ணன் மற்றும் 24- ஆவது வாா்டில் எஸ்.சண்முகம் உள்ளிட்டோா் தலைமை வகித்தனா்.

நகா்மன்றத் தலைவா் மு.பாத்திமா பஷீரா முன்னிலை வகித்தாா். பகுதி சபை கூட்டத்தை, சிறப்பு அழைப்பாளரான நகரச் செயலாளா் எஸ்.வி.பக்கிரிசாமி தொடங்கி வைத்தாா்.

அனைத்துக் கூட்டங்களிலும் அப்பகுதி மக்கள் வாா்டுக்குத் தேவையான கோரிக்கை மனுக்களை வழங்கினா். அனைத்துத் தேவைகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தருவதாக நகா்மன்றத் தலைவா் பாத்திமா பஷீரா உறுதியளித்தாா்.

ஆணையா் ப.கிருஷ்ணவேணி, நகரமைப்பு ஆய்வாளா் க.செல்வம், மேலாளா் ஆா்.லதா மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.