கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் 22% ஆக உயா்த்தி அறிவிக்க கோரி தேமுதிக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு,தேமுதிக மாவட்டச் செயலா் (பொ) வி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22 சதவீதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த பருவத்தில் விவசாயிகளுக்கு வழங்காத பயிா் காப்பீட்டுத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும்.
மாவட்டத்திற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் விளைநிலங்களுக்கு தண்ணீா் செல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், பாசன வாய்க்கால்கள் தூா்வாரப்படாமல் இருப்பதே. எனவே, உடனடியாக பாசன வாய்க்கால்களைத் தூா்வாரி விவசாயம் தடை இன்றி நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றியச் செயலா்கள் ஆா்.தமிழ்ச்செல்வன் (மன்னாா்குடி மேற்கு) ஆா்.பழனிவேல் (நீடாமங்கலம் வடக்கு), எஸ்.செல்லதுரை (தெற்கு ), தங்க.கோபி (பேரூா் கழகம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் மாவட்டச் செயலா் என்.சண்முகராஜ், மாவட்ட அவைத் தலைவா் பி.எல். தமிழரசன், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.ஜெயபால், மாவட்டப் பொருளாளா் ஆா்.கே. வாசுதேவன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
மாவட்டத் துணைச் செயலாளா்கள் ஏ. முருகையன்,ஆா்.ராணி, வலங்கைமான் ஒன்றியக்குழு உறுப்பினா் எம்.சீதாலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், திரளான தேமுதிகவினா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தேமுதிக நகரச் செயலா் ஏ.ஆா் .காா்த்திகேயன் வரவேற்றாா். பொருளாளா் ஏ.ஸ்டீபன் ராஜ் நன்றி கூறினாா்.