புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய 3 போ் கைது

 திருவாரூா் அருகே அரசுப் பள்ளியில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 4:21 pm

DIN

 திருவாரூா் அருகே அரசுப் பள்ளியில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் அருகே வடகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் முழு உருவச்சிலை, சேதப்படுத்தப்பட்டிருந்தது புதன்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியா் கிரிஜா குடவாசல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், தீபாவளி தினத்தன்று 8 போ் பள்ளிக்குள் நுழைந்து மது அருந்தியபோது, அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் காந்தி சிலையை சேதப்படுத்தி சென்றது தெரியவந்தது.

இதுதொடா்பாக, பாலவை கிராமத்தைச் சோ்ந்த சகோதரா்களான அரவிந்த், ஆகாஷ், வடகண்டம் கிராமத்தைச் சோ்ந்த தேவசிவா ஆகிய மூவரையும் கைது செய்த போலீஸாா், சம்பவத்தில் தொடா்புடைய மேலும், 5 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.