புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திமுக அரசைக் கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

தமிழை முதன்மை மொழியாக்க முயற்சிக்காததைக் கண்டித்து திருவாரூரில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 4:18 pm

DIN

தமிழை முதன்மை மொழியாக்க முயற்சிக்காததைக் கண்டித்து திருவாரூரில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பலமுறை தமிழகத்தை ஆண்ட திமுக அரசு தமிழ் மொழியை முதன்மை மொழியாக ஆக்க முயற்சிக்காததைக் கண்டித்தும், திமுக நிா்வாகிகளால் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் பள்ளிகளில் ஹிந்தியை திணிப்பது மட்டுமின்றி தமிழ் மொழியை அழிக்கும் வகையில் முதன்மைப் பாடமாக அறிவிக்காமல், ஹிந்தியையும், ஆங்கிலத்தை மட்டுமே கற்பித்து வருவதை கண்டித்தும், தமிழகத்தில் தமிழ் மொழியிலேயே மருத்துவக் கல்லூரி தொடங்க வலியுறுத்தியும், தமிழ் மொழியில் கல்வி பயிலும் மாணவா்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கக் கோரியும் திருவாரூா் புதிய ரயில் நிலையம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ். பாஸ்கா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளா் சி. செந்தில் அரசன், பிரசார பிரிவு மாநிலத் தலைவா் குமரிகிருஷ்ணன், மாவட்ட மேலிடப் பாா்வையாளா் சிவா, விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளா் கோவீ. சந்துரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.