உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

கூத்தாநல்லூர் டெல்டா பப்ளிக் பள்ளியில் குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் அமைந்துள்ள டெல்டா பப்ளிக் பள்ளியில் குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:25 pm IST

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் அமைந்துள்ள டெல்டா பப்ளிக் பள்ளியில் குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

டெல்டா பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாறுவேடப் போட்டி நிகழ்விற்கு, மன்ப உல் உலா மேல் நிலைப் பள்ளி தாளாளர் திமுஜீதீன் தலைமை வகித்தார். முதல்வர் ஜோஸ்பின் முன்னிலை வகித்தார். ஆசிரியர் எம்.வைஷ்ணவி வரவேற்றார். மாறுவேடப் போட்டி விழாவுக்கு, இந்தியன் வங்கியின் ஓய்வு பெற்ற மேலாளர் ஜெ.முஹம்மது அபிபுல்லா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இந்நிகழ்வில், குழந்தைகள் திருவள்ளுவர், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பாரதியார், பகத்சிங், வேலுநாச்சியார், கண்ணகி, குந்தவை நாச்சியார், ராஜராஜ சோழன், ஒளவையார், மருத்துவர், காவலர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் வேடமிட்டு, அவர்களைப் பற்றி பேசினர். 

26 குழந்தைகளுக்கும் மேலான வேடமிட்டவர்களில் குந்தவை நாச்சியார் வேடமிட்ட சிறுமி சிறப்பாக பேசினார். துணை முதல்வர் சுருளி நாதன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.