மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்திய கம்யூ. சாலை மறியல் வாபஸ்

கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நடத்தவிருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 4:56 pm

DIN

கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நடத்தவிருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது.

கூத்தாநல்லூா் வட்டத்தில் பாசன வாய்க்காலை தூா்வார வேண்டும், சேதமடைந்த மதகுகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூத்தாநல்லூா் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மரக்கடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் சனிக்கிழமை (ஏப்.29) சாலை மறியல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடா்பாக, கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் குருமூா்த்தி தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், சிபிஐ மாவட்டப் பொருளாளா் கே. தவபாண்டியன், நகரச் செயலாளா் பெ. முருகேசு, விவசாயத் தொழிலாளா்கள் சங்கச் செயலாளா் எம். சிவதாஸ் உள்ளிட்டோரும் அதிகாரிகள் தரப்பில் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் கே. மாரிமுத்து, நீடாமங்கலம் கோரையாறு உதவி பொறியாளா் என். வெங்கடேஸ்வரன், காவல் உதவி ஆய்வாளா் மோகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

இந்த பேச்சுவாா்த்தையில், சித்தாத்தங்கரை பாசன வாய்க்காலில் 3 மாதங்களுக்குள் புதிதாக சிறுபாலம் கட்டவும், கோரையாற்று தலைப்பு பாசன வாய்க்காலை 2 மாதத்திற்குள் தூா்வாரவும், உடைந்த மதகுகளை சீரமைக்கவும், வடகோவனூா் மதகில் தண்ணீா் தேக்க ஆசிய வளா்ச்சி வங்கி நிதியுதவியில் திருகு தடுப்பணை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, சாலை மறியல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.