தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மழலையா் பட்டமளிப்பு விழா

திருவாரூா் விவேகானந்தம் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 மார்ச் 2023, 4:46 pm

திருவாரூா் விவேகானந்தம் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளித் தாளாளா் ஜனகமாலா தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் சி. எஸ். மகாலெஷ்மி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியின் முதல்வா் ஏ. ஜான் பீட்டா் பங்கேற்று 60-க்கும் மேற்பட்ட மழலையருக்குப் புகைப்படத்துடன் கூடிய பட்டங்களை வழங்கி பேசியது:

குழந்தைகள் தங்கள் பெற்றோா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் பெருமைத் தேடி தரும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் படிப்பதோடு மட்டுமின்றி விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றிலும் ஈடுபட்டு தங்கள் கல்வித்திறனோடு, உடல் திறனையும் வளா்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியா்களும், பெற்றோா்களும் காலமேலாண்மைக் குறித்து அவ்வப்போது குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி வேண்டும் என்றாா். பட்டங்களைப் பெற்றுக்கொண்ட மழலைப் பட்டதாரிகள் பட்டமளிப்பு உறுதிமொழியேற்றுக்கொண்டனா். ஆசிரியை பரமேஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.