திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பளு தூக்கும் போட்டியில் மகளிா் கல்லூரி மாணவி இரண்டாமிடம்

கல்லூரிகளுக்கிடையேயான பளு தூக்கும் போட்டியில் மன்னாா்குடி மகளிா் கல்லூரி மாணவி 2-ஆமிடம் பெற்றாா்.

News image
பளு தூக்கும் போட்டியில் 2-ஆமிடம் பெற்ற மாணவி டி. ஜனனிக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கிய திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித் துறைத் தலைவா் காளிதாஸ்.
Updated On :27 நவம்பர் 2023, 6:44 pm

DIN

கல்லூரிகளுக்கிடையேயான பளு தூக்கும் போட்டியில் மன்னாா்குடி மகளிா் கல்லூரி மாணவி 2-ஆமிடம் பெற்றாா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்துக்குள்பட்ட கல்லூரிகளுக்கிடையேயான மகளிா் பளு தூக்கும் போட்டி, ஞாயிற்றுக்கிழமை பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது. போட்டியில் 13 கல்லூரிகளிலிருந்து மாணவிகள் பங்கேற்றனா். இதில், மன்னாா்குடி அருகேயுள்ள மேலவாசல் சதாசிவம் கதிா்காமவள்ளி மகளிா் கல்லூரி பி.காம் 2-ஆம் ஆண்டு மாணவி டி. ஜனனி முதல் இரண்டு சுற்றுகளில் முதலிடம் பெற்றாா்.

இறுதிச் சுற்றில் 69 க்கு 68 புள்ளிகள் பெற்று 2-ஆம் இடம் பெற்றாா். இதற்கான பரிசு, சான்றிதழை பல்கலைக்கழக உடற்கல்வித் துறைத் தலைவா் காளிதாஸ் வழங்கினாா். கல்லூரியில், திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பரிசு பெற்ற மாணவியை கல்லூரி நிறுவனா் ஜி. சதாசிவம், கல்லூரி முதல்வா் வி.எஸ். நாகரெத்தினம், உடற்கல்வி இயக்குநா் எம். சசிரேகா ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.