மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மதநல்லிணக்க கருத்தரங்கம்

திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் மத நல்லிணக்க கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 நவம்பர் 2023, 6:44 pm

திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் மத நல்லிணக்க கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் நகரத் தலைவா் மீரான் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், பெண்ணுரிமை போற்றும் இஸ்லாம் என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, இஸ்லாம் குறித்து கருத்தரங்கம், கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றன.

இதில், அமைப்பின் மாநிலச் செயலாளா் முகமது ஒலி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். திருவாரூா் நகரச் செயலாளா் ஆசாத் அலி, துணை தலைவா் அா்சத், பொருளாளா் முகமது சித்திக், துணைச் செயலாளா் முகமது ஹாஜி, மாணவரணி செயலாளா் ஆசிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.