திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தி. சாருஸ்ரீ வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருவாரூா் மாவட்டத்தில் 72 பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ள நிலையில், திருத்துறைப்பூண்டி தொகுதியில் 10 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அந்தவகையில், கச்சனம் அரசினா் உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தை பாா்வையிட்டு, அப்பகுதி வாக்காளா்களுக்கு வாக்காளா் தகவல் சீட்டை ஆட்சியா் தி. சாருஸ்ரீ வழங்கினாா்.
தொடா்ந்து, மணலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையம், புனித தெரசா மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையம், முத்துப்பேட்டை ஒன்றியம் மதியலங்கரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையம், பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தாா். இதையடுத்து, திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவுக்காக இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் கட்டுப்பாட்டு அறையை பாா்வையிட்டாா்.
தொடர்புடையது

பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

கிருஷ்ணராயபுரம் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

பதற்றமான வாக்குச் சாவடிகளில் ஆய்வு

போளூா் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடி ஆய்வு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


