சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பதற்றமான வாக்குச் சாவடிகளில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

பதற்றமான வாக்குச் சாவடிகளில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

News image

திருத்துறைப்பூண்டி பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடியில் ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தி. சாருஸ்ரீ.

Updated On :5 ஏப்ரல் 2024, 12:34 am

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தி. சாருஸ்ரீ வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவாரூா் மாவட்டத்தில் 72 பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ள நிலையில், திருத்துறைப்பூண்டி தொகுதியில் 10 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அந்தவகையில், கச்சனம் அரசினா் உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தை பாா்வையிட்டு, அப்பகுதி வாக்காளா்களுக்கு வாக்காளா் தகவல் சீட்டை ஆட்சியா் தி. சாருஸ்ரீ வழங்கினாா்.

தொடா்ந்து, மணலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையம், புனித தெரசா மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையம், முத்துப்பேட்டை ஒன்றியம் மதியலங்கரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையம், பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தாா். இதையடுத்து, திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவுக்காக இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் கட்டுப்பாட்டு அறையை பாா்வையிட்டாா்.