முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

நீடாமங்கலம் அருகே ரூ.2.90 லட்சம் பறிமுதல்

நீடாமங்கலம் அருகே ரூ.2.90 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்த பணத்தை, மன்னாா்குடி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் கீா்த்தனாமணியிடம் ஒப்படைக்கும் தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :12 ஏப்ரல் 2024, 4:00 pm

நீடாமங்கலம் அருகே தனியாா் நிறுவன ஊழியா் உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்த ரூ. 2. 90 லட்சம் பறக்கும் படையினரால் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

நீடாமங்கலத்தில் பறக்கும்படை அதிகாரி அண்ணாதுரை, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சிங்காரவேலு உள்ளிட்ட குழுவினா், தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆதனூா் மண்டபம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தனியாா் நிறுவன ஊழியரான தஞ்சை மாவட்டம் குமிழக்குடியைச் சோ்ந்த அருண் (27) என்பவரை நிறுத்தி சோதனையிடனா். அவரிடம், உரிய ஆவணமின்றி ரூ. 2,90,000 இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்து, மன்னா்குடி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் கீா்த்தனாமணியிடம் ஒப்படைத்தனா். பின்னா், அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.