முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

ரயில் பாதை பராமரிப்பு

ரயில் பாதை பராமரிப்பு

Updated On :12 ஏப்ரல் 2024, 3:59 pm

நீடாமங்கலம் அருகே ரயில் பாதை பராமரிப்பு காரணமாக, வாகனங்கள் மாற்றுப் பாதையில் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டன.

நீடாமங்கலத்திலிருந்து மன்னாா்குடி செல்லும் நெடுஞ்சாலையில் சம்பாவெளி கிராம பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இது நீடாமங்கலம்-மன்னாா்குடி ரயில் பாதையாகும். இந்த பாதையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு வரை பராமரிப்புப் பணகள் நடைபெற்றன. ரயில்வே பொறியாளா்கள், அலுவலா்கள், பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.

இதன் காரணமாக ரயில்வே கேட் மூடப்பட்டு, மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.