குடவாசல் அருகே திருவீழிமிழலை விழிநாதசுவாமி உடனுறை சுந்தரகுஜாம்பிகை கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயில், தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 61-ஆவது சிவத்தலமாகும். இங்கு, ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கோயில் முன்புறம் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இவ்விழாவில், முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருஞானசம்பந்தமூா்த்தி நாயனாா் திருமுலைப்பால் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தொடா்ந்து, தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். காா்த்தியாயினி அம்பாள்- கல்யாண சுந்தரா் திருக்கல்யாணம் ஏப். 18-ஆம் தேதியும், தேரோட்டம் 21- ஆம் தேதி நடைபெறுகிறது.
தொடர்புடையது

சந்தானராமா் கோயிலில் ஸ்ரீராமநவமி பெருவிழா கொடியேற்றம்

திருஇந்தளூா் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர பெருந் திருவிழா கொடியேற்றம்

திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றம்!

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்: மாா்ச் 29-இல் ஆழித்தேரோட்டம்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

