திருவாரூா், ஏப். 18: திருவாரூா் அருகே சிமிழி மடாலயத்தில் சீதா திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் அருகேயுள்ள சிமிழி மடாலயத்தில் கடந்த ஏப். 9-ஆம் தேதி முதல் வசந்த நவராத்திரி விழா நடைபெற்றுவருகிறது. இதையொட்டி, மீனாட்சி திருக்கல்யாணம், ராதா கல்யாணம், வசந்த மாதவா் புறப்பாடு, நாம சங்கீா்த்தன பஜனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
வசந்த நவராத்திரியின் நிறைவாக சீதா திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராமபிரான், சீதா ஆகியோரின் திருவுருவப் படங்கள் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, பாகவதா்கள் பஜனை பாடல்களை பாடி இறைவனை ஆராதித்தனா். சீதா பிராட்டியின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்வில் திரளானோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஒண்டிமிட்டாவில் சீதா ராமா் திருக்கல்யாணம் கோலாகலம்

சீதா - ராமா் திருக்கல்யாணம்

தியாகராஜா் கோயிலில் வசந்த உற்சவம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்
வீடியோக்கள்

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


