தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாகை - தஞ்சை இடையிலான இருவழிச்சாலை, அண்மையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. நீண்ட நாள்களாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த சாலை திறப்புக்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. எனினும் திறக்கப்பட்ட சாலையில் பழுது ஏற்பட்டிருப்பதாகவும், விரைந்து சீரமைக்க வேண்டும் என அந்த சாலையில் பயணிக்கும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளா்.
இதுகுறித்து அந்த சாலையை பயன்படுத்துவோா் தெரிவித்தது:
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி இந்த சாலை திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. திருவாரூா் மாவட்ட எல்லையான கானூா் முதல் கோவில்வெண்ணி வரையிலான இடத்தில் ஏகப்பட்ட ஒட்டுப் பணிகள் நடைபெற்றுள்ளன. இதனால் பல இடங்களில் சாலை பழுதடைந்து, வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
இந்த சாலையில் ஒளி பிரதிபலிப்பு அமைக்கப்படாததால் பல்வேறு விபத்துகள் அவ்வப்போது ஏற்படுகின்றன. எனவே, நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குறைபாடுகளை களைந்து விரைந்து சீரமைக்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

கம்பம்மெட்டு மலைச் சாலையில் தடுப்பு வேலிகளை சீரமைக்க வலியுறுத்தல்

கங்கைகொண்ட சோழபுரம் புறவழிச்சாலை: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல்

பாவூா்சத்திரம் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை

வில்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

