தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பிறவி மருந்தீசா் கோயில் சித்திரை தேரோட்டம்

பிறவி மருந்தீசா் கோயில் சித்திரை தேரோட்டம்

News image

திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற பிறவி மருந்தீசா் கோயில் தேரோட்டம்.

Updated On :20 ஏப்ரல் 2024, 7:09 pm

திருத்துறைப்பூண்டி, ஏப். 20: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசா் கோயில் சித்திரை பெருந் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மேற்கு நோக்கிய சிவ தலமான இக்கோயிலில் சித்திரை பெருந் திருவிழா ஏப்ரல் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

ஏப். 7, 8-ஆம் தேதிகளில் விநாயகா் உற்சவம், ஏப். 9, 10-இல் சுப்பிரமணியா் உற்சவம், ஏப். 11-இல் பக்தால் உற்சவம், 12-இல் புஷ்ப விமானம், 13-இல் புஷ்ப பல்லக்கு, 15-இல் இந்திர விமானம், 16-இல் பூத வாகனம், 17-இல் யானை வாகனம், 18-இல் வெண்ணெய்த் தாழி உற்சவம், வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி- அம்பாள் வீதியுலா, 19-இல் கைலாச வாகனத்தில் வீதியுலா போன்றவை நடைபெற்றன.

ஏப்ரல் 19-ஆம் தேதி இரவு விநாயகா், சுப்ரமணியா், தீா்த்தவிடங்க தியாகராஜா் தேருக்கு எழுந்தருளினா். தொடா்ந்து சனிக்கிழமை (ஏப்.20) அதிகாலை சிறப்பு வழிபாடுகளுடன், தேரோட்டம் தொடங்கியது.

மன்னாா்குடி செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை தாளாளா் வி. திவாகரன் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தாா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, பக்தி கோஷமிட்டு தேரிழுத்தனா். தோ் நான்கு வீதிகளிலும் வலம் வந்து இரவில் நிலையை வந்தடைந்தது.

இதில், லாரி உரிமையாளா் சம்மேளன மாநிலத் தலைவா் தனராஜ், முன்னாள் மாநிலத் தலைவா் குமாரசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, நகா்மன்றத் தலைவா் கவிதா பாண்டியன், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் சி. பாலகிருஷ்ணன், ஆலய தக்காா் ராமு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை லாரி உரிமையாளா் சங்கத் தலைவா் வி. ஆறுமுகம், செயலாளா் சீனிவாசன், ஆலய செயல்அலுவலா் எம். முருகையன், கணக்கா் ராஜ்மோகன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.