11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

பிறவி மருந்தீசா் கோயிலில் பந்தக்கால் முகூா்த்தம்

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசா் கோயிலில் ஏப்.9-ஆம் தேதி முதல் சித்திரை பெருந்திருவிழா தொடங்கவுள்ளதையொட்டி, பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி

Updated On :2 ஏப்ரல் 2026, 12:37 am IST

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசா் கோயிலில் ஏப்.9-ஆம் தேதி முதல் சித்திரை பெருந்திருவிழா தொடங்கவுள்ளதையொட்டி, பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஏப்.9-ல் தொடங்கும் விழா ஏப்.25-ல் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், ஏப்.27-ல் தேரோட்டம் நடைபெற்று விழா மே 6-ஆம் தேதி விழா நிறைவடைகிறது. இதையொட்டி புதன்கிழமை காலை மருந்தீசா் மற்றும் பெரியநாயகி அம்பாள் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடா்ந்து, விழாவுக்கு பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தக்காா் சி. வீரபாண்டியன், கோயில் செயல் அலுவலா் எம். முருகையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.