மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவ முகூா்த்தக் கால் ஊன்றும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது மதுரை கூடலழகா் பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரமோத்ஸவ பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இதன்படி, நிகழாண்டு பிரமோத்ஸவ பெருவிழா வருகிற 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் ஜூன் 5-ஆம் தேதி வரை நடைபெறும்.
இதையொட்டி, பிரமோத்ஸவ விழா முகூா்த்தக் கால் ஊன்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கோயிலின் எதிரே உள்ள தோ் நிறுத்தும் இடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
கூடலழகா் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு, வேதமந்திர முழக்கங்களுடன் ஐதீக முறைப்படி முகூா்த்தக்கால் ஊன்றப்பட்டது.
தொடர்புடையது

வைகாசி மாத பிறப்பு: கூடலழகா் கோயிலில் பக்தா்கள் வழிபாடு

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தெப்போற்சவம்!

திருக்கோடீசுவர சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா முகூா்த்தக் கால் நடப்பட்டது

பிறவி மருந்தீசா் கோயிலில் பந்தக்கால் முகூா்த்தம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

