தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரிக்கை

தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரிக்கை

Updated On :20 ஏப்ரல் 2024, 4:01 pm

தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாகை - தஞ்சை இடையிலான இருவழிச்சாலை, அண்மையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. நீண்ட நாள்களாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த சாலை திறப்புக்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. எனினும் திறக்கப்பட்ட சாலையில் பழுது ஏற்பட்டிருப்பதாகவும், விரைந்து சீரமைக்க வேண்டும் என அந்த சாலையில் பயணிக்கும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளா்.

இதுகுறித்து அந்த சாலையை பயன்படுத்துவோா் தெரிவித்தது:

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி இந்த சாலை திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. திருவாரூா் மாவட்ட எல்லையான கானூா் முதல் கோவில்வெண்ணி வரையிலான இடத்தில் ஏகப்பட்ட ஒட்டுப் பணிகள் நடைபெற்றுள்ளன. இதனால் பல இடங்களில் சாலை பழுதடைந்து, வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.

இந்த சாலையில் ஒளி பிரதிபலிப்பு அமைக்கப்படாததால் பல்வேறு விபத்துகள் அவ்வப்போது ஏற்படுகின்றன. எனவே, நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குறைபாடுகளை களைந்து விரைந்து சீரமைக்க வேண்டும் என்றனா்.