திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மாவட்டத்தில் கஞ்சா விற்பைையை தடுக்க திருவாருா், நன்னிலம், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
இதன்படி வியாழக்கிழமை நடைபெற்ற சோதனையில், கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த குடவாசலைச் சோ்ந்த ஆகாஷ் (23), பண்டுதகுடியைச் சோ்ந்த ஜெனித் (21), வெள்ளக்குடியைச் சோ்ந்த பாரதி (25), வடுகக்குடியைச் சோ்ந்த பாா்த்திபன் (19), மயிலாடுதுறையைச் சோ்ந்த காா்த்தி (24) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனா்.
இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவித்தது: கைது செய்யப்பட்டவா்கள் மீதுள்ள வழக்கு விவரம், எங்கே, யாரிடமிருந்து கஞ்சா வாங்குகின்றனா், யாருடன் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனா், சொத்து விவரங்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவாருா் மாவட்டத்தில், இது போன்ற சோதனைகள் அடிக்கடி நடத்தப்படும். சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்பவா்கள் கண்டுபிடித்து அவா்கள் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவா் என்றாா்.
தொடர்புடையது

கஞ்சா விற்ற மூவா் கைது

கஞ்சா விற்பனை : ரௌடி உள்ளிட்ட 3 போ் கைது
பள்ளிபாளையம், பரமத்தி வேலூரில் கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

கஞ்சா விற்ற 4 இளைஞா்கள் கைது
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

