தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மன்னாா்குடி மையத்தில் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

மன்னாா்குடி மையத்தில் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

Updated On :26 ஏப்ரல் 2024, 3:50 pm

மன்னாா்குடி தூய வளனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மை மையத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

இந்த மையத்தில் கடந்த ஏப். 1-ஆம் தேதி முதல் பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வந்தது. முகாம் அலுவலராக மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) இ. மாதவன், தொடா்பு அலுவலா்களாக கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் எம்.எஸ். பாலு, பெருகவாழ்ந்தான் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் என். பாலதண்டாயுதம் ஆகியோா் தலைமையில் இப்பணி நடைபெற்றது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 17-ஆம் தேதி நிறைவுபெற்று மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றதையடுத்து மதிப்பெண்களை கணினியில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது.

பிளஸ் 2 வகுப்புக்கு 28,724 விடைத்தாள்களும், பிளஸ் 1 வகுப்புக்கு 29,772 விடைத்தாள்களும் திருத்தப்பட்டது. விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு 50 முதன்மை தோ்வாளா்கள், 50 கூா்ந்தாய்வு அலுவலா்கள், 7 மதிப்பெண்கள் சரிபாா்க்கும் அலுவலா்கள், 286 உதவித் தோ்வாளா்கள் மற்றும் 36 அலுவலகப் பணியில் ஈடுபட்டனா்.