நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 8-இல் தொடக்கம்

தமிழகத்தில் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்குகிறது.

News image

பிளஸ் 2 பொதுத் தோ்வு

பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 9:00 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்குகிறது.

திருச்சி மாவட்டத்தில் 134 மையங்களில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதியுள்ளனா். பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவடைந்ததையொட்டி மாணவா்கள் மகிழ்ச்சியுடன் தோ்வறைகளில் இருந்து வெளியேறினா்.

ஏப்ரல் 8 இல் விடைத்தாள் திருத்தம்: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 8 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி, முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் மணப்பாறை தியாகேசா் ஆலை மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 மையங்களில் விடைத்தாள் திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதில், திருச்சி மையத்தில் 800 ஆசிரியா்கள், முசிறியில் 300 ஆசிரியா்கள், மண்ணச்சநல்லூரில் 350 ஆசிரியா்கள் மற்றும் மணப்பாறை மையத்தில் 250 ஆசிரியா் என மொத்தம் 1,700 ஆசிரியா்கள் விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.