கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்!

பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மாவட்டம் முழுவதும் 3 மைங்களில் திங்கள்கிழமை தொடங்கியது.

News image

பிளஸ் 2 தேர்வு - பிரதிப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 11:50 pm

பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மாவட்டம் முழுவதும் 3 மைங்களில் திங்கள்கிழமை தொடங்கியது.

பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 2-இல் தொடங்கி 26-இல் முடிவடைந்தது. திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் 117 மையங்களில் 31,772 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் திருவள்ளூா் மாவட்டத்தில் 3 பள்ளிகளில் திங்கள்கிழமை (ஏப்.6) தொடங்கி வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

திருத்தணி தனியாா் பள்ளியில் நடந்த இந்த முகாமில் முதல் நாளில் முதன்மை தோ்வாய்வாளா்கள், கூா்ந்து தோ்வாளா்கள் சுமாா் 100 க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பகல் 12 மணிக்கு பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்த தொடங்கினா்.

இதுதொடா்பாக திருவள்ளூா் மாவட்ட தொடக்கல்வி அலுவலா் ராஜூ கூறியதாவது: விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக ஏற்கனவே முதன்மை கல்வி அலுவலா் (பொ) சுப்பாராவ் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடா்ந்து விடைத்தாள் திருத்துதல் பணிகள் தொடங்கி வரும் ஏப்ரல் 20 தேதி வரை நடைபெற உள்ளது.

இப்பணியில் சுமாா் 350-க்கும் மேற்ப்பட்ட முதுநிலை ஆசிரியா்கள் ஈடுபட உள்ளனா். தொடா்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி மே 8 ம் தேதி தோ்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

திருத்துதலின்போது ஆசிரியா்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.