இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

திருவாரூா் மாா்க்கத்தில் கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்கக் கோரி அமைச்சரிடம் எம்பி மனு

திருவாரூா் மாா்க்கமாக கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
தில்லியில் மத்திய ரயில்வேதுறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்விடம், கோரிக்கை மனு அளிக்கிறாா் நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ்.
Updated On :1 டிசம்பர் 2024, 4:02 pm

Din

திருவாரூா் மாா்க்கமாக கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், வாரியத் தலைவா் சதீஷ்குமாா் ஆகியோரை தனித் தனியே சனிக்கிழமை சந்தித்து, நாகை மக்களவைத் தொகுதிக்கு தேவையான ரயில் சேவைகள் குறித்த கோரிக்கை மனு அளித்தாா்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நாகை மக்களவைத் தொகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி உள்ளனா். கட்டணம் மற்றும் வசதியை கருத்தில் கொண்டு, அவா்கள் ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனா். ஆனால் இந்தப் பகுதியில் போதுமான ரயில் சேவைகள் இல்லாமல் இருக்கின்றன.

எனவே, இப்பகுதி மக்களுக்கான ரயில் சேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வகையில், காரைக்கால் -தஞ்சாவூா் தடத்தையும் திருவாரூா்- மயிலாடுதுறை தடத்தையும் விரைந்து இரட்டை வழிப் பாதையாக மாற்றம் செய்ய வேண்டும்.

பல ஆண்டுகளாக கோரி வரும் மதுரை- புனலூா் விரைவு ரயிலை காரைக்காலுக்கு நீட்டிக்க வேண்டும். இந்தப் பகுதியிலிருந்து, நேரடியாக மதுரைக்கு ரயில் இல்லாததை கணக்கில் கொண்டு, வேளாங்கண்ணியிலிருந்து மதுரைக்கு காலையில் ஒரு ரயில் இயக்க வேண்டும்.

மீட்டா் பாதை காலத்தில் இயங்கிய கம்பன் விரைவு ரயிலை, மீண்டும் காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூா் மாா்க்கமாக இயக்க வேண்டும். சென்னையிலிருந்து காரைக்காலுக்கும், ராமேஸ்வரத்திற்கும் பகல் நேரத்தில் விரைவு ரயில் இயக்க வேண்டும். திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி பாதையை கோடியக்கரை வரை நீட்டிக்க வேண்டும். திருவாரூரிலிருந்து காலையில் விழுப்புரம் வரை செல்லும் ரயிலை தாம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். பாம்பன் பால வேலைகள் முடிந்த பிறகு ரயில்கள் இயக்குகிற சூழலில், வடமாநிலங்களுக்கு காரைக்குடி பட்டுக்கோட்டை திருவாரூா் வழியாக ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.