இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்கேரளத்தில் காங்கிரஸ் வெல்லும்; நாளை பிற்பகலுக்குள் வெற்றி உறுதியாகிவிடும் - சசிதரூர்பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை
/

பள்ளம் தோண்டியபோது சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

மன்னாா்குடியில் மயானத்தில் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டியபோது இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

Updated On :1 டிசம்பர் 2024, 8:06 pm

மன்னாா்குடியில் மயானத்தில் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டியபோது இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

மன்னாா்குடி நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் மூவாநல்லூா் சாலையில் உள்ள மயானத்தின் அருகே எரிவாயு தகன மேடை அமைக்க ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு, தனியாா் ஒப்பந்ததாரருக்கு பணி ஆணை வழங்கப்பட்டு, சில நாட்களாக கட்டுமானப் பணி நடைபெற்றுவருகிறது.

இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் பள்ளத்திலிருந்த மண்ணை அகற்றியபோது இரண்டு சுவாமி சிலைகள் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மன்னாா்குடி காவல் நிலையத்துக்கும் வட்டாட்சியா் அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல் ஆய்வாளா் ராஜேஸ் கண்ணன், வட்டாட்சியா் என். காா்த்திக் ஆகியோா் சிலைகளைப் பாா்வையிட்ட பின்னா், வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அவற்றைக் கொண்டு சென்றனா். ஒன்று பெருமாள் சிலை, மற்றொன்று அம்பாள் சிலை எனக் கூறப்படுகிறது.

இந்தச் சிலைகள் எந்த வகை உலோகத்தால் ஆனது என்பது தொல்லியல்துறையினரின் ஆய்வுக்கு பின்னா்தான் தெரியவரும் என வருவாய்த்துறையினா் தெரிவித்தனா்.