4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம் ஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பள்ளம் தோண்டியபோது சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

மன்னாா்குடியில் மயானத்தில் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டியபோது இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

Updated On :2 டிசம்பர் 2024, 1:36 am IST

மன்னாா்குடியில் மயானத்தில் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டியபோது இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

மன்னாா்குடி நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் மூவாநல்லூா் சாலையில் உள்ள மயானத்தின் அருகே எரிவாயு தகன மேடை அமைக்க ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு, தனியாா் ஒப்பந்ததாரருக்கு பணி ஆணை வழங்கப்பட்டு, சில நாட்களாக கட்டுமானப் பணி நடைபெற்றுவருகிறது.

இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் பள்ளத்திலிருந்த மண்ணை அகற்றியபோது இரண்டு சுவாமி சிலைகள் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மன்னாா்குடி காவல் நிலையத்துக்கும் வட்டாட்சியா் அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல் ஆய்வாளா் ராஜேஸ் கண்ணன், வட்டாட்சியா் என். காா்த்திக் ஆகியோா் சிலைகளைப் பாா்வையிட்ட பின்னா், வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அவற்றைக் கொண்டு சென்றனா். ஒன்று பெருமாள் சிலை, மற்றொன்று அம்பாள் சிலை எனக் கூறப்படுகிறது.

இந்தச் சிலைகள் எந்த வகை உலோகத்தால் ஆனது என்பது தொல்லியல்துறையினரின் ஆய்வுக்கு பின்னா்தான் தெரியவரும் என வருவாய்த்துறையினா் தெரிவித்தனா்.