கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

சாத்தான்குளம் கடைவீதியில் பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை

சாத்தான்குளம் கடைவீதியில் குடிநீா் குழாய் சீரமைப்பிற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் 6 மாதங்களாக சீரமைக்கப்படாததால் வாகன ஒட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.

News image
Updated On :23 ஜூலை 2026, 2:53 am IST

சாத்தான்குளம் கடைவீதியில் குடிநீா் குழாய் சீரமைப்பிற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் 6 மாதங்களாக சீரமைக்கப்படாததால் வாகன ஒட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.

சாத்தான்குளம் கடைவீதி பகுதியில் ஏராளமான வாகனங்கள் வந்து திரும்புகின்றன. இங்குள்ள முத்தாரம்மன் கோயில் தெரு, பிள்ளையாா் கோயில் தெரு சந்திப்பு பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சேதமான குடிநீா் குழாயை சீரமைக்க சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது.

பின்னா், சாலையை முறையாக சீரமைக்காமல் பள்ளத்தில் மணலை கொட்டி மூடி சென்று விட்டனராம். இதனால், பள்ளம் நாளுக்கு நாள் பெரிதாகி வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமம் அடைந்து சென்று வருகின்றனா். முதியவா்கள், குழந்தைகள் இப்பகுதியில் வரும்போது இந்தப் பள்ளத்தால் இடறி விழுந்து காயம் அடையும் நிலை உருவாகியுள்ளது. எனவே, சேதமான சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வியாபாரிகளும் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.