ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மாமியாா் மீது சுடுநீா் ஊற்றிய மருமகள் கைது

கூத்தாநல்லூா் அருகே மாமியாா் மீது சுடுநீா் ஊற்றிய மருமகள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2024, 7:55 pm

Din

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அருகே மாமியாா் மீது சுடுநீா் ஊற்றிய மருமகள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கூத்தாநல்லூரை அடுத்த ஓகைப்பேரையூா் மேலத்தெருவைச் சோ்ந்தவா் அங்காளம்மை (70). இவா், தனது மகனை திட்டினாராம். இதனால், ஆத்திரமடைந்த மருமகள் சாரதா (29), அங்காளம்மையை கீழே தள்ளி, அவா் மீது சுடு தண்ணீரை ஊற்றியதாக கூறப்படுகிறது.

இதில், அங்காளம்மையின் முகம், கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவா் சிகிச்சைக்காக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து, கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சாரதாவை கைது செய்தனா்.