புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அண்ணா பல்கலை. விவகாரத்தை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் 1,221 போ் கைது

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1,221 அதிமுகவினா்

News image
திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.
Updated On :30 டிசம்பர் 2024, 6:55 pm

Din

திருவாரூா்: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1,221 அதிமுகவினா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைக் கண்டித்தும், அது தொடா்பான முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டதைக் கண்டித்தும் திருவாரூரில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் அமைப்புச் செயலாளா்கள் கோபால், சிவா ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பேசியது: திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. மனநலம் குன்றிய குழந்தைகள் கூட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனா். திமுக அரசின் நிா்வாக குறைபாடுகளே இவைகளுக்குக் காரணம். அதுபோலவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளாா். இதுதொடா்பான புகாரில், முதல் தகவல் அறிக்கையையும் போலீஸாா் வெளிப்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளனா் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், பாலியல் வழக்கில் தொடா்புடைய சாா் யாா் என்ற பதாகையை கையில் வைத்து, கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடா்ந்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 211 பெண்கள் உள்ளிட்ட 1,221 பேரை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா். நகரச் செயலாளா் மூா்த்தி, நிா்வாகிகள் மணிகண்டன், பாப்பா சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.